Thursday 31 May 2012

அன்னைய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்

அனைத்து அன்னைய‌ர்க‌ளுக்கும் என் தாய்க்கும்
என் ம‌ன‌ம் நிறைந்த‌ அன்னைய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்

Tuesday 29 May 2012


*கடவுளின் தேடல் *

கடவுள் என்பது நம்பிக்கை
கடவள் என்பது தூய்மை
கடவுள் என்பது தியனாம்
கடவுள் என்பது கருணை
கடவுள் என்பது உதவி
கடவுள் என்பது அன்பு
கடவுள் என்பது காதல்
கடவுள் என்பது ஜெயம்
கடவுள் என்பது சாந்தம்
இவைகள் மனித உணர்வுகள்
உன்னால் உணர முடிந்தவை
மனிதரில் தான் தெய்வம் உண்டு
இவ் உணர்வுகள் உணர படவில்லையேல்
நீ கடவுளை தேடும் பக்தன்

Wednesday 23 May 2012

முத்த நிமிடங்களுக்காக Embarrassed

அழகிய மாலை வேலை
அந்த கடற்கரை மணலில்
இதமாய் வீசிய குளிர்காற்று
இருமேனி இடைவெளி குறைத்தது

அவள் அவன் கரம் இறுக்க பிடித்து
உன்னை மிகவும்  பிடிக்கும் என்றால்
அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு
நீ என்றி நான் இல்லை என்றான்

முழு நிலவின் தரிசனம் முழுமையாக
அவள் கண்ணில் ஒரு ஏக்கம் கண்டான்
உடலும் உணர்வுகளும் ஒன்றான நிமிடங்களில்
இதழ்கள் இணைய இதயம் துடித்தது

அவள் தலை என் மார்பில் புதைத்தால்
அவன்  இருகரத்தால் அவள் முகம் தூக்கி
அவள் விழிகளை வினாடிகள் ரசித்தான்
இதழ்கள் இணைய இமைகள் மூடிக்கொண்டது

காந்தவிசை தோற்கும் ஒரு ஈர்பால்
இறுக்கமாய் இணைந்திருந்த இதழ்கள்
ஈர் உயிர் ஓர் உயிரான நொடி துளிகள்
இமை வழி கசிந்தது கண்ணீர் துளிகள்

சொர்க்கம் மண்ணிலா விண்ணிலா
கற்பனையில் கடந்து வந்த முத்த காட்சியே
என்னை சொர்கத்துக்கு அழைத்து சென்றது போல
காத்திருக்கிறேன் அந்த முத்த நிமிடங்களுக்காக

 போட்டி கவிதைகள்


கொடுக்கப்படும் ஒரு வார்த்தை குறைந்தது ஒரு முறை ஆவது பாவித்து
ஒரு கவிதை எழுத வேண்டும் 
 
ஊமை
உன்னை பிடித்தும் விலகும் போது 
வெறுத்தும் சேர்ந்து இருக்கும் போது
உண்மையும் உணர்வுகளும் ஊமை ஆகி
பேச முடிந்தும் மௌனம்


நிமிடமும்
வான் மழை பெய்ய முன்பும் வானவில்
பார்வைக்கு அழகாக ஒரு நிமிடம்
கண் மழை பெய்ய முன்பும் வானவில்
காதலியாக நினைவில் ஓவருநிமிடமும்


கண்
என் இதயம்
எனக்காக துடித்தாலும்
அதை நான் உணர்வது
நீ என் கண் முன்னே வரும் போது


நாணத்தில்
நொடிக்கு ஒரு தடவை
துடிக்கும் என் இமை
துடிக்க கூட மறந்தது
என்னை  பார்த்த நாணத்தில்
உன் கண் இமை துடிக்கும்
அந்த  அழகை ரசிக்க



வழி
என் கண்கள் உன் கண்களுடன் பேசியதால் தான்
என் இதயம் உன் இதயத்துடன் காதல் கொண்டது
எம் காதலுக்கு தூது விட்டது   நம் கண்கள்
நாம் இணைய வழி தந்த விழிக்கு நன்றி


நாடி
அன்பு காட்ட மட்டும் எனக்கு தெரியவில்லை
அனால் உன் அன்பு கிடைக்காமல் துடித்தேன்
துடித்தேன்  துடித்தேன்  என் நாடி துடிப்பு நிற்கும் வரை
நீ துடித்து என்னை நாடி வந்து புரிந்து கொண்டாய்
ஒரு உயிருக்காக இன்னோர் உயிர் துடிப்பது தான் அன்பு என்று


பரிசு
என் முன்பே நீ கண் மூடி போனதால்
உன் பின்பே  கல்லறை வர நினைத்தேன்
அதன் முன்பே என் கருவறை நீ வந்தாய்
அதுதான் அன்பே   நீ தந்த கடைசி காதல் பரிசு

இமைகள்
எதிரில் இருந்தும் தூரத்தில் தெரிந்த நீ
இமைகள் மூடும் போது நெருக்கமாகுறாய்
எதிரில் இருந்தும்  பிரிந்து இருப்பதாய் விட
இமைகள் மூடி இணைந்து இருப்பதே சுகம்