Sunday 30 March 2014

விழி வழி

மை இட்ட உன் விழியால் 
நீ என் நெஞ்சில் எழுதிய 
வாசிக்க முடியாத 
உணர முடிந்த 
உயிர் உள்ள கவிதைதான் 
நம் காதல் 

By HeartBeat-Santh 


Wednesday 26 March 2014

தாலாட்டு

தொட்டிலில்  ஆட்டி 
தூங்க வைப்பதை பார்த்தது உண்டு 
எனக்கும் நடந்திருக்கும் 
ஆனால் ஞாபகம் இல்லை 
ஆனால் உன் நெஞ்சிலே 
தொட்டில் ஆனா நாள் முதல் 
தூக்கமும் இல்லை துக்கமும் இல்லை 
இந்த ஞாபகம் தொலைய போவதும் இல்லை 

By HeartBeat_Santh



Tuesday 25 March 2014

சிற்பி

உயிர் ஒன்று உருப்பெற 
இடம் தந்தவள் தாய் 

உலகின் சிகரம் தொட 
கரம் தந்தவர் தந்தை 

தன் மூச்சில் எனை 
சுவாசிக்க வைத்தவள் தாய் 

தன் மூச்சு இருக்கும் வரை 
எமை செதுக்கிய சிற்பி தந்தை 

By HeartBeat_Santh



Sunday 23 March 2014

என்ன இனம் ??

கருணையும் காதலும் 
இல்லை என்றால் 
நீ விலங்கும் இல்லை 
வேற ஏதோ ஒரு பிறப்பு 
சக மனிதரை கொன்று 
வென்று வாழ நினைக்கும் 
புதுமையான சிரிக்க தெரிந்த 
நகருக்குள் வாழும் ??

By Heartbeat_Santh

Friday 21 March 2014

ஈர இதயம்

ஈர நிலத்தில் நீ நடந்து 
வழுக்கி விழும் போதெல்லாம் 
ஈர நிலம் என் இதயம் ஆகாத  
என என்ன தோன்றுகிறது 
அப்போதாவது ஒரு முறையேனும்  
என் இதயத்தில் விழுவாய் அல்லவா ;)

By HeartBeat-Santh