Saturday 19 December 2015

!! அவளுக்கே தெரியாது !!

!! அவளுக்கே தெரியாது !! 

குயிலும்  பாட கூச்ச படுகிறது  
அவள் குரல் கேட்ட பின்  

நிலவும் கவிதை எழுதுகிறது 
அவள் எழில் முகம் பார்த்து 

பூக்களுக்கும்  வியர்க்கிறது 
இவள் செவ்விதழ் மலர்ந்து சிரிக்க 

தாஜ்மஹாளுக்கும் இதயம் துடிக்கும் 
இவள் மூச்சு காற்று பட்டால் 

வானவில்லும் நிறம் மங்கும் 
அவள் நிறம் பார்த்தல் 

காற்றுக்கும் மூச்சு முட்டும் 
அவள் சுவாசம் கலந்த பின்

கடலுக்கும் தாகம் எடுக்கும் 
அவள் பாதம் நனைத்த பின் 

இத்தனையும் அவளுக்கே 
தெரியாது என்பது தான் வியப்பே..!!


ByPrasanthS

Thursday 9 July 2015

அறிவு வரம் அல்ல சாபம்.

இருளை கண்டு பயம் கொள்பவர் 
உறங்கமால் இருந்தது இல்லை 
இருவிழி மூடின் இருள் சூழும்
பயம் , ஆசை , கோவம்,..
மனித உணர்வுகளில் பல 
கற்று கொண்ட  உணர்வுகள் 
அறிவை கழித்து பார்த்தல் 
மனித உணர்வுகளில் பல 
வளர்ப்பில் போதிக்க பட்டவை 
அறிவு என்பது 
கடவுள் மனிதனுக்கு கொடுத்த 
வரம் அல்ல சாபம்.

By - Heart Beat Santh

Friday 15 May 2015

காதல் !
கண்ணிமைக்கும் 
நொடிபொழுதில் 
காதல் கற்பிக்கப்படும் 

காதல் !
விழியால் 
வழி போட்டு 
இதயங்கள் இடம் மாறும் 

காதல் !
காமத்தின் தேடல் அல்ல 
இரு உயிர்கள் இணைந்து தேடும் 
புது ஜெனத்தின் தொடக்கம் 
By Heartbeat-Santh

Tuesday 28 April 2015

உயிர் மவுனிக்க ஓவியம் பேச போகிறதா ? !!

பிழையை சரியாக செய்பவன் தப்பிக்கிறான் 
பிழையை பிழையாக செய்பவன் மாட்டிக்கிறான் 
சிறிதோ பெரிதோ பிழை பிழையே 
நம்மில் பலர் தப்பிக்க தெரிந்த குற்றவாளிகளே 
ஆயுதம் செய்பவன் அன்பை பற்றி பேசலாமா ?
எய்தவன் எவனோ அம்பை அழித்து என்ன பயன் ?
தப்பை குறைக்க மரண தண்டனை என்றால்
அந்த மரணத்தை கொடுபவர்க்கு என்ன தண்டனை 
இறக்க செய்து யாரையும் சுவாசிக்க வைக்க முடியாது 
உயிரை கொன்று உயிர்களை நேசிக்க வைக்க முடியாது !!

By Heartbeat-santh