Tuesday 12 July 2016

‪கலைக்கோயில்‬

‪கலைக்கோயில்‬
குயிலும் , மயிலும் கூட 
ஆடலும் பாடலும் கற்ற விரும்பும் 
ரசிக்கும் கலைகளின் ராணி நீ 
கலைகள் அரங்கேறும் கலைக்கோயில்

உன் எழில் வர்ணிக்க இயலாது 
கற்பனைக்கும் மூச்சு வாங்கும் 
கவிதையில் உனை எழுத 
எழுத்துக்களும் ஏங்கி நிற்கும்

உன் பார்வை வீச்சில் உயிர் பூக்கும் 
உன் பார்வை விலகின் உயிர் தவிக்கும்
உனை இன்றி நான் வேண்ட வரம் இல்லை 
உனை நீங்கி நான் வாழ வாழ்க்கை இல்லை

No comments:

Post a Comment